இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் 04 ஆம் திகதி யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமது தரப்பினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment