Ads (728x90)

ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”அசி திசி” ஊடகவியல் புலமைப்பரிசில் திட்டத்தின் 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விருது வழங்கும் விழா நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 61 ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன, இதன் முக்கிய நோக்கம் பத்திரிகையாளர்கள் பயிற்சி படிப்புகள் மூலம் தங்கள் ஊடக தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதாகும். 

இந்த புலமைப்பரிசில்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், குறுகிய கால அல்லது நீண்ட கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் உயர் டிப்ளோமா படிப்புகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க, ஊடக அமைச்சின் கூடுதல் செயலாளர்கள் தீபா லியனகே, என்.ஏ.கே.எல். விஜேநாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷன், மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget