Ads (728x90)

2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள்.

இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget