அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூபா 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூபா 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


Post a Comment