Ads (728x90)

ஜனாதிபதி நிதியம் கடந்த ஆட்சியில் அதிகாரத்திலிருந்த குழுக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்குக் கொண்டு வர முடிந்தது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அது அறிவு நிறைந்த ஒரு நல்ல எதிர்கால மனித வளத்தை உருவாக்கப் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget