Ads (728x90)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை படுகொலை செய்வதற்கான திட்டம் நடந்து வருவதற்கான தகவலை, இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அல்லது பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்ட ஒரு கொலையாளி மூலம் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இந்தத் தகவல் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும், அதை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget