Ads (728x90)

2025 ஜூலை மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

பல அரசியல்வாதிகளுக்கு எதிராக 1,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கையூட்டல்கள் தொடர்பில் மொத்தம் 3,937 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 341 முறைப்பாடுகள் மீளவும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் செல்லுபடியான முறைப்பாடுகளில் 2,682 முறைப்பாடுகள் விசாரணைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டன. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மொத்தம் 1,011 முறைப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

489 முறைப்பாடுகள் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் 275 முறைப்பாடுகள் விசாரணைக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 1,154 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட உள்ளன என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget