ஜனாதிபதி வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டார். தொடர்ந்து நண்பகல் வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
பாலப்புனரமைப்பு பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து கிராமங்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும், நாட்டில் மீண்டும் யுத்தம் உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், அனைத்து மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



Post a Comment