Ads (728x90)

யாழ்ப்பாணம் - மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார். மொத்த விற்பனை வியாபாரத்தை விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget