Ads (728x90)

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான்  உதவி ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும்  செயல்படுத்த எதிர்பார்க்கப்படும்  புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும்  இதன் போது வெகுவாக ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget