தற்போது பிற்பகல் 1.30 மணி வரை உள்ள பாடசாலை நேரத்தை புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 30 நிமிடங்கள் அதிகமாக நீடிக்கப்படவுள்ளது.
இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது. இந்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும், தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணி நேரமாக நீடிக்க முன்மொழிந்த நிலையில், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment