மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓரிரு வாரங்களில் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலிருந்து இலங்கையில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
20 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் எந்தவொரு பிரஜையும் தாம் அறிந்த தகவல்களை எவ்வித பயமும் இன்றிப் பொலிஸாருக்குத் தெரிவிக்க முடியும். தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும் என்றார்.

Post a Comment