நாட்டின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட வளிமண்டல தளம்பல் நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைமை மேலும் வலுவடைந்து நாட்டை அண்மித்து வடமேல் திசையில் நகருமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்காள விரிகுடாவை அண்மித்து கடற்றொழிலில் ஈடுப்படும் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment