இன்று பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைப் பிரதமர் கலாநிதி கலாநிதி ஹரிணி அமரசூரியாவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவும், இலங்கையும் நீண்டகால பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளும் அமைதி மற்றும் சகவாழ்வு என்ற ஐந்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
இலங்கையுடன் 'வன் பெல்ட் வன் ரோட்' (One Belt One Road) திட்டத்தை தரமான முறையில் கூட்டாக உருவாக்க சீனா தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சீனாவுடனான அதன் உறவை மதிக்கும் அதேவேளை, 'வன் பெல்ட் வன் ரோட்' முயற்சியை ஆதரிப்பதாகவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீனா அதன் அண்டை நாடுகளுடனான அதன் இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.

Post a Comment