Ads (728x90)

நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கிலான உருவாக்கப்பட்ட தேசிய செயற்பாட்டு சபை முதன்முறையாக நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.                        

போதைப்பொருள் வலையமைப்பை ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல், பொதுமக்களை அறிவூட்டுவதற்காக வெகுஜன அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊடக பிரச்சாரத்தை செயல்படுத்துதல் குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.  

போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ள விதம் மற்றும் அது எவ்வாறு ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியுள்ளது என்பது குறித்து ஜனாதிபதி இங்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தத் திட்டத்தை பாராட்டி தமது ஒத்துழைப்பை தெரிவித்தனர்.  

Post a Comment

Recent News

Recent Posts Widget