Ads (728x90)


முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லையாக இருக்கிறது. பரு நீங்கினாலும், அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு முகமே அசிங்கமாகி விடுகிறது. முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம், சருமத்தில் எண்ணெய்ப்பசைதான். நம்முடைய சருமத்தில் சபேசியஸ் சுரப்பி ஒவ்வொரு முடிகளுக்கு அருகில் உள்ளது. இந்த சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும் போது எண்ணெய்ப் பசை முகத்தில் சுரக்க ஆரம்பிக்கும்.

சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது சருமத்தில் உள்ள ஓட்டைகள் அடைபடும். அது தான் பருக்கள் வர முக்கிய காரணம். எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது, கூடவே பேக்டீரியா இன்பெக்‌ஷனும் ஏற்படும். 

இதற்கு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பசை மற்றும் பருப்பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது முகத்தை கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு பதிலாக நான்கு முறை கழுவலாம். அதிகமாக கழுவினாலும், சருமம் வறண்டு போகும் வாய்ப்புள்ளது. கிளிசரில் எலுமிச்சை அடங்கிய சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சோப்பிற்கு பதில் பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.

உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம். வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், காரமான மற்றும் அதிகம் மசாலாக்கள் கொண்டு உணவுகளை தவிர்க்கவேண்டும். பருக்கள் மறுபடியும் ஏற்படாமல், தழும்புகள் தோன்றாமல் இருக்க பீல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 

வீட்டில் இருந்தபடியே பருக்களுக்கு சில கைவைத்தியமும் உண்டு. துளசியை மென்றும் சாப்பிடலாம். உடன் ஒரு கைப்பிடி துளசியை மிதமான சுடுதண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். பருக்கள் இரண்டு நாட்களில் காய்ந்து உதிர்ந்துவிடும். மேலும் பருக்கள் மூலம் ஏற்படும் பேக்டீரியா தொற்றும் ஏற்படாது.

துளசி தவிர அரிசி மாவும் நல்லது. அரிவு மாவு 2 டீஸ்பூன், வெள்ளரி சாறு 2 டீஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget