அடுத்த சில நாட்களுக்குக் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிட்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும்.
சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழச்சி பதிவாகும். ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சேதங்களைக் குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment