பயணக் கட்டுப்பாடுகள் உள்ள 19 நாடுகளுக்கான குடியேற்ற விண்ணப்பங்களை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பர்மா (மியான்மர்), சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்கள் கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள்.

Post a Comment