தற்போது காற்றின் மாசடைவு மட்டம் 150 முதல் 200 வரை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது ஆரோக்கியமற்ற நிலையை குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய வளிமாசு நகர்வு மற்றும் தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் தாக்கமே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டுகளிலும் இதே காலப்பகுதியில் இவ்வாறான நிலைமை அவதானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் (சுவாசக் கோளாறு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்) இதனால் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம் என கலாநிதி குணவர்தன எச்சரித்துள்ளார்.
பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment