Ads (728x90)

சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூபா 400 மில்லியன் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களுடன் ஷாங்காயிலிருந்து புறப்பட்ட போயிங் 747-400 ரக பெரிய சரக்கு வானுர்தி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

குறித்த நிவாரணப் பொருட்களில் உயிர்காப்பு அங்கிகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன.  

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் ஜி சாங்ஹோங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget