Ads (728x90)

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலைக்கான நிவாரணப்பொருட்களுடன் ரஷ்யாவின் ஒரு சிறப்பு சரக்கு விமானம் 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தில் ஒரு நடமாடும் மின் நிலையம், தாவர எண்ணெய், சர்க்கரை, அரிசி மற்றும் கூடாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் லெவன் ஜார்ஜியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம  கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget