Ads (728x90)

முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வாகன விபத்து தொடர்பான விசாரணைகளில் கடமை தவறியதாகக் கூறப்படும் சப்புகஸ்கந்த காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

சப்புகஸ்கந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயற்பட்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முறையான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை விசேட விசாரணைப் பிரிவிற்கு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget