Ads (728x90)

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். 

தையிட்டி பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தனியார் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நீண்டகாலமாகத் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தையிட்டி காணி விடுவிப்பு போராட்டத்திற்கு, ஒரு பௌத்த மதகுருவாக விமலதர்ம தேரர் வழங்கியுள்ள இந்த ஆதரவு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget