Ads (728x90)

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World 2025) இலங்கையின் சபினா யூசுப் மூன்றாம் இடத்தைப் பெற்று (2nd Runner-up) இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இப்போட்டியில் உலகின் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget