Ads (728x90)

உகண்டாவில் கடந்த 40 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் யோவேரி முசெவேனி அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உகண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர் இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான  43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சுமாா் 4.5 கோடி மக்கள்தொகை கொண்ட உகண்டாவின் இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.





Post a Comment

Recent News

Recent Posts Widget