நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் எனவும், கடந்த 2025ஆம் ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"ட்ரம்ப் செய்துள்ள காரியங்கள் உலகிற்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லியுள்ளன. அவர் இந்தப் பரிசைப் பெறுவதற்கு முழு உரிமையுடையவர் என்பதை அவரது செயல்கள் நிரூபித்துள்ளன" எனவும் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா மக்கள் சார்பாக ட்ரம்ப்பின் துணிச்சலான முடிவுகளுக்குத் தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட தலையீடு காரணமாகவே வெனிசுவேலாவில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டதாக மரியா கரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
Post a Comment