இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய முகாமைத்துவ உதவி அதிகாரிகள் 23 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நாங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் சட்ட உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தரணி ஒருவரிடம் ஏன் செல்கிறார்.? அந்த நபர் சட்ட உதவி பெற்றுக்கொள்வதற்கு வரும் காரணம் சிறிய விடயமாக இருக்கலாம். என்றாலும் அது அவருக்கு பெரிய விடயமாகும். அதனால் சட்ட உதவியை பெற வருபவர்களுக்கு அனுதாபத்துடன் செவிசாயுங்கள். செவிசாய்ப்பதன் மூலமும் அவரது பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கிறது.
அரச சேவை என்பது வெறுமனே ஓய்வூதியம் பெறும் தொழில் அல்ல. தங்களின் தொழில் தொடர்பில் பொறுப்புடன் மக்கள் தொடர்பில் கருணையுடன் சேவை செய்ய வேண்டும். எமது அரசாங்கம் அந்த கெளரவத்தை வழங்குகிறது. பணம் இருப்பவருக்கு ஒரு மாதிரியும் பணம் இல்லாதவருக்கு வேறு மாதிரியும் செயற்படுவது நீதியானது அல்ல என்றார்.
.jpeg)
Post a Comment