Ads (728x90)

தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.எதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
 
அன்னதானம்:  வறுமையும், கடன்களும் நீங்கும்.

பூமிதானம்:  பிரம்ம லோகத்தையும் ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும்.

கோதானம்:  ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும்.

வஸ்திரதானம்:  ஆயுளை விருத்தி செய்யும்.

தீப தானம்:  கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேன் தானம்:  புத்திர பாக்கியம் உண்டாக்கும்.

அரிசி தானம்:  பாவங்களை போக்கும்.

தயிர் தானம்:  இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

நெய் தானம்:  நோய்களை நிவர்த்தி செய்யும்.

நெல்லிக்கனி தானம்:  ஞானம் உண்டாக்கும்.

பால் தானம்:  துக்கம் நீக்கும்.

தேங்காய் தானம்:  பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தங்க தானம்:  குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும்.

வெள்ளி தானம்:  மனக்கவலை நீங்கும்.

பழங்கள் தானம்:  புத்தியும் சித்தியும் தரும்.

இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.

Post a Comment

Recent News

Recent Posts Widget