Ads (728x90)

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் திடீ­ரென ஊருக்­குள் புகுந்த யானை­யின் கோரத் தாக்­கு­த­லில் சிக்­குண்டு ஒரு­வர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார். இரு­வர் காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.
யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற இந்த யானைத் தாக்­கு­த­லால் அந்­தப் பகுதி மக்­கள் பெரும் பயப் பீதிக்கு உள்­ளா­கி­னர். நிம்­ம­தி­யி­ழந்த நிலை­யில் – இரவு முழு­வ­தும் கண்­வி­ழித்­தி­ருந்­த­தாக மக்­கள் தெரி­வித்­த­னர்.
வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தேச செய­லர் பிரி­வின் உடுத்­துறை, ஆழி­ய­வ­ளைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு யானை­யின் நட­மாட்­டத்தை மக்­கள் அவ­தா­னித்­துள்­ள­னர்.
திடீ­ரென அந்­தப் பகு­தி­யில் யானை வந்­த­மை­யால் மக்­கள் பதற்­ற­ம­டைந்­துள்­ள­னர். நெருப்பை எரித்து தம்மை தற்­காத்­துக் கொண்­ட­னர். யானை அங்­கி­ருந்து மரு­தங்­கேணி சந்­திப் பகு­தியை நோக்கி வந்­துள்­ளது.
நேற்­றுக் காலை மரு­தங்­கே­ணிச் சந்­திப் பகு­தி­யி­லி­ருந்து உடுத்­துறை நோக்­கிச் செல்­லும் வீதி­யில் யானை நட­மா­டித் திரிந்­துள்­ளது. அந்­தப் பகு­திக்­குச் சென்ற ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லி­ருந்து சிறிய காயங்­க­ளு­டன் நூலி­ழை­யில் தப்பி வந்­துள்­ளார்.
இதன் பின்­னர் ஊர­வர்­கள் 4 பேர் அந்­தப் பகு­தியை நோக்­கிச் சென்­றுள்­ள­னர். யானை திடீ­ரென வந்­த­தும் அங்­கி­ருந்து தப்பி ஓட அவர்­கள் முயற்­சித்­துள்­ள­னர். ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளார்.
ஏனை­யோர் ஓடி­யுள்­ள­னர். தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வ­ரைக் காண­வில்லை என்று திரும்­பிச் சென்­ற­போது, இரு­வர் யானை­யின் தாக்­கு­த­லால் காய­ம­டைந்­துள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் காலை 10 மணிக்கு நடை­பெற்­றுள்­ளது.
யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி காணா­மற்­போன நப­ரது அலை­பே­சிக்கு அழைப்பு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அலை­பேசி ஒலித்த போதும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.
அந்­தப் பகு­தி­யில் யானை தொடர்ந்­தும் நட­மா­டிக் கொண்­டி­ருந்­த­மை­யால் அவரை மீட்­கச் செல்ல முடி­யா­மல் உற­வி­னர்­கள் திண­றி­னர். மதி­யம் ஒரு மணி­ய­ள­வி­லேயே அந்­தப் பகு­திக்­குச் சென்று அவ­ரது சட­லத்தை மீட்­டுள்­ள­னர்.
4 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான சிற்­றம்­ப­லம் சத்­தி­ய­சீ­லன் (வயது-54) என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்டு கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். முரு­க­தாஸ் (வயது-32) மற்­றும் ஞான­கு­மார் (வயது-30) இரு­வ­ருமே காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.
யானையை விரட்­டும் முயற்சி நேற்று மாலை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனா­லும் யானை அந்­தப் பகு­தியை விட்டு அக­ல­வில்லை. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் இந்த முயற்­சி­யில் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.
இதே­வேளை, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் காட்­டுப் பகு­தி­யி­லி­ருந்து நீர் நிலை­கள் வற்­றி­யுள்­ள­மை­யால் கரை­யோ­ரப் பகு­தி­யூ­டாக வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­திக்கு இந்த யானை வந்து சேர்ந்­தி­ருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget