Ads (728x90)

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.- சசிகலா, தினகரன் தலைமையில் கீழ் தான் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் எல்லோரும் செயல்பட்டு வருகிறார்கள். சசிகலாவுக்கும், தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை. இதை திசை திருப்பவே இவ்வாறு நாடகம் ஆடுகிறார்கள்.

 ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் என்கிறார். ஆனால் இதுவரை அவர் இந்த விசயம் சம்பந்தமாக கோர்ட்டுக்கு சென்றாரா?. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் தான் இணைப்பு சாத்தியம் என்கிறார். ஆனால் அதை தவிர அவர்களை பற்றி வேறு எங்கேயாவது பேசினாரா? நிறைய பொதுக்கூட்டங்களில் பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அப்போது சசிகலா, தினகரன் பற்றி அதிகம் பேசாதது ஏன்?. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுந்திருக்க கூடாது என்பதற்காக இது போன்ற நாடகம் ஆடுகிறார்கள். அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. தேர்தல் வரும் போது மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள். கமல்ஹாசன் மட்டும் அல்ல ஓட்டு போடும் அனைத்து குடிமகனுக்கும் கருத்து கூற உரிமை உண்டு.
ஒருவர் குறை சொன்னால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர அவரை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் பேசுவது தவறு. தினகரன் மூலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தோப்பு வெங்கடாச்சலம் முயற்சிக்கிறார். இது வேடிக்கையாக உள்ளது. இது தொகுதி சம்பந்தப்பட்ட வி‌ஷயம் தோப்பு வெங்கடாச்சலமே நேராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இது குறித்து பேச வேண்டியது தானே? இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget