Ads (728x90)

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளை­யா­ட­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்­டியை பக­லி­ரவு போட்­டி­யாக நடத்த திட்டம் உள்­ள­தாக இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.
அதே­வேளை கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டியை கராச்சி அல்­லது லாகூரில் நடத்­தவும் எண்­ணி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.
தற்­போது டெஸ்ட் போட்­டி­க­ளுக்கு பார்­வை­யா­ளர்கள் குறைந்து வரு­கி­றார்கள். அதனால் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­களை ஐ.சி.சி. அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அந்­த­வ­கையில் இது­வ­ரையில் நான்கு பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன.
இந்­நி­லையில் மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் இங்­கி­லாந்து அணிகள் மோதும் பக­லி­ரவு டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்­ப­மா­னது.
இங்­கி­லாந்து அணி விளை­யாடும் முதல் பக­லி­ரவு டெஸ்ட் போட்டி இதுதான்.  இங்­கி­லாந்தில் நடை­பெ­று­கிற முதல் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியும் இதுதான். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டி­யுள்­ளது. 
இதனால் இலங்கை -– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget