Ads (728x90)

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாய் வழங்கிய சாட்சியத்தையும், அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டு வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்  அறிவிக்கப்படவுள்ளது.

தற்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் 332 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார். தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget