
வித்தியா கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பாயத்தால் குற்ற வாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெண்கள் வித்தியாவின் உருவப் படத்துக்கு முன்பாகப் பொங்கல் பொங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு அதி உச்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவை விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Post a Comment