
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் கவனயீப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று யாழிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் பொது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் அமைப்பின் அமைப்பாளர் வண பிதா சக்திவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை காலை 9- மணிமுதல் 12 மணிவரை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment