Ads (728x90)


அநு­ரா­த­புரம் சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு நீதி கிடைக்­க­ வேண்­டியும், அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் நாளை யாழ்ப்­பாணம் பஸ் நிலை­யத்­திற்கு முன்னால் மாபெரும் கவ­ன­யீப்புப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் நேற்று யாழி­லுள்ள  அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது  இம்­மு­டிவு எட்­டப்­பட்­டுள்­ளது.

பொது அமைப்­புகள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற சந்­திப்பின் பொது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தும் அமைப்பின் அமைப்­பாளர்  வண பிதா சக்­திவேல் ஊட­கங்­க­ளுக்கு  தெரி­வித்தார்.

நாளை  திங்­கட்­கி­ழமை காலை 9- மணி­முதல் 12 மணி­வரை யாழ் மத்­திய பேருந்து நிலை­யத்­திற்கு முன்னால் இந்த கவ­ன­யீர்ப்பு போராட்டம் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் சிவில் அமைப்­புக்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது­மக்கள்  என அனைவரையும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 



Post a Comment

Recent News

Recent Posts Widget