Ads (728x90)

விஜயகாந்திற்கு நெருக்கமாக இருந்த இளங்கோவன்,ஆஸ்தான ஜோதிடரின் அறிவுரைப்படி, 'டம்மி' ஆக்கப்பட்டதாக, தே.மு.தி.க.,வில் பேசப்படுகிறது.

தே.மு.தி.க.,வில் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் சந்திரகுமார், இளங்கோவன், பார்த்தசாரதி. தே.மு.தி.க., தலைவர்,விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். 2016ல், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காததால், கட்சியில் இருந்து, சந்திரகுமார் வெளியேறி விட்டார். பொருளாளராக இளங்கோவனும், தலைமை நிலைய செயலராக பார்த்தசாரதியும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழுவில், புதிய பொருளாளராக, தர்மபுரியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் நியமிக்கப்பட்டார். கட்சியின் துணை செயலராக, இளங்கோவன் மாற்றப்பட்டார். தற்போது, துணை செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டுஉள்ளது.
அவருக்கு பதிலாக, அக்பர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேநேரத்தில், சேலம் புறநகர் மாவட்ட செயலராக, இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளங்கோவனின் பதவி பறிப்பு, தே.மு.தி.க.,வில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:சட்டசபை தேர்தல் நேரத்தில், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம், முன்பணம் பெறப்பட்டது; கட்சிக்கும் பணம் வசூலிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டவர்கள், முன்பணத்தை செலவழித்தனர்.

போட்டியிடாதவர்கள், முன்பணத்தை திரும்ப பெற்றனர். ஆனால், கட்சி நிதிக்காக பெற்ற பணத்தை, இளங்கோவன் கணக்கு காட்டாமல் ஏமாற்றியுள்ளார்.இது, விஜயகாந்திற்கு சமீபத்தில் தெரிய வந்தது. அதனால், இளங்கோவனை பார்க்கவே, அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், கட்சியில் தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க, இளங்கோவனை, மாவட்ட செயலராக நியமித்துள்ளார் என்று, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே பொருளாளராகஇருந்த விஜயகாந்தின் நண்பர், சுந்தர்ராஜன், 2012ல் வெளியேறினார். அதன்பின், இளங்கோவன், புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட பின், கட்சிக்கு பெரும் பின்னடைவும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. அவரை சந்திப்பதை தவிர்த்தால், மீண்டும் கட்சி எழுச்சிப் பெறும் என, விஜயகாந்திற்கு, அவரின் ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதை கேட்டு தான், இளங்கோவனை, விஜயகாந்த் நீக்கியுள்ளார் என்று, இன்னொரு தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.இது குறித்து, இளங்கோவனிடம் கேட்டபோது, 'கட்சியின் புதிய அவைத் தலைவராக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.'ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மாநில பதவி வகிக்கக் கூடாது என, கட்சி தலைமை விரும்பியது. அதனால், நானே முன்வந்து, மாவட்ட செயலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஜோதிடர் ஆலோசனைப்படி, என்னை நீக்கியதாக கூறுவது தவறு' என்றா

Post a Comment

Recent News

Recent Posts Widget