அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடைபெறவுள்ளது.புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப் பாட்டை மகிந்த அணி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்களின் இணக்கப்பாட்டுடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இணைந்து பயணிக்க வருமாறு மகிந்த அணிக்கு அரச தலைவர் மைத்திரி இந்தச் சந்திப்பில் அழைப்பு விடுப்பார் எனவும் தெரிய வருகின்றது.
மகிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டுவரும் தொகுதி அமைப்பாளர்களிடமிருந்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவிகளைப் பறித்ததால் இந்தச் சந்திப்பு நடைபெறாது என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மூத்த உறுப்பினர்கள் தலையிட்டதால் திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment