வவுனியாவில் வித்தியா குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றார் மைத்திரி
கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின், சகோதரியையும், தாயாரையும் அரச தலைவர் வவுனியாவில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவர்களுக்கு வவுனியாவில் அரச செலவில் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வில் காணி உறுதிப்பத்திரம் வித்தியாவின் தாயாரிடம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த வீட்டுக்கு அரச தலைவர் சென்றார் என்று அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்தது. அது தொடர்பான ஒளிப்படங்களையும் அனுப்பி வைத்தது.
மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்விக்கும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்க்காதிற்காகவும் இயன்றளவு உதவிகளை வழங்குவதாக அரச தலைவர் குறிப்பிட்டார்.
மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அரச தலைவர் வழங்கிய உதவி குறித்து வித்தியாவின் தாயார் அரச தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வித்தியா கொலையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வித்தியாவின் தாயார் கூறியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு வித்தியாவின் தாயார் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் அரச தரைவரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது வவுனியாவில் வீடு அமைத்துத் தருவதாக அரச தலைவர் உறுதியளித்திருந்தார்.

Post a Comment