
ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியில், தன்னாட்சி பெற்றதாக திகழ்கிறது. இதற்கென தனி மொழி, சட்டம் உள்ளன. தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரம் இது. மக்கள்தொகை 75 லட்சம். இவர்கள் ஸ்பானிஷ் மொழியை விடகேடலோனியா மொழியை தான் அதிகம் பேசுகின்றனர்.
1975: ஸ்பெயினின் சர்வாதிகாரியாக திகழ்ந்த பிரான்சிஸ்கோ பிரான்கோ மறைந்தார்.
1978: ஸ்பெயினில் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டது. கேடலோனியாவுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2006: நிதி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சில துறைகளில் கேடாலோனியாவுக்கு மேலும் தன்னாட்சி உரிமையை, ஸ்பெயின் அரசு வழங்கியது.
2008: ஸ்பெயினில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது. கேடலோனியாவும் பாதிக்கப்பட்டது. அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் ஸ்பெயின் அரசு இப்பகுதியின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
2010: கேடலோனியாவுக்கு 2006ல் வழங்கிய சிறப்பு உரிமையை, ஸ்பானிஷ் அரசியலமைப்பு நீதிமன்றம் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதை எதிர்த்து அங்கு போராட்டம் வெடித்தது. தலைநகர் பார்சிலோனாவில் 10 லட்சம் பேர் திரண்டு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு நடந்த மாகாண தேர்தலில், தனிநாடு கோருபவர்களின் கட்சி, அமோக வெற்றி பெற்றது.
2014: தனிநாடு தொடர்பான வாக்கெடுப்பில், 80 சதவீத கேடலோனிய மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் இதனை ஸ்பெயின் அரசு நிராகரித்தது.
2015: ஒன்றுபட்ட ஸ்பெயின் தேசத்தையே விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனும் கேடலோனியாவின் சுதந்திரத்தை விரும்பவில்லை என தெரிவித்தது.
2017 மார்ச் 13: கேடலோனியாவின் முன்னாள் அதிபர் ஆர்துர் மாஸ், அரசு பதவியை தொடர்வதற்கு, ஸ்பெயின் அரசு தடை விதித்தது.
ஜூன் 9: தனிநாடு கோரிக்கைக்கான புதிய தீர்மானம் அக்., 1ல் கொண்டு வரப்படும் என கேட்டலோனிய அதிபர் கார்லஸ் பியூஜ்மென்ட் அறிவிப்பு.
செப்., 7: ஸ்பானிஷ் அரசியலமைப்பு நீதிமன்றம், இதனை நிராகரித்தது.
செப்., 20 - 21: தனிநாடு தீர்மானம் கொண்டு வர முயற்சித்த கேடலோனியா தலைவர்கள் சிலரை ஸ்பெயின் போலீசாரால் கைது. ஸ்பானிஷ் அரசியலமைப்பு நீதிமன்றம் 22 உறுப்பினர்களுக்கு அபராதமும் விதித்தது.
அக்., 1: பொதுவாக்கெடுப்பு நடந்தது. 90 சதவீத மக்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பு.
அக்., 16: தனி நாடு அறிவிப்பு இப்போதைக்கு இல்லை, ஸ்பெயின் அரசுடன் பேச்சு நடத்தப்படும் என அதிபர் கார்லஸ் ப்யூடிமோன்ட் தெரிவித்தார்.
அக்., 19: ஸ்பெயின் அரசு பேச்சு நடத்த விரும்பிவில்லை என அறிவிப்பு.
அக்., 21: கேடலோனியாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என ஸ்பெயின் பிரதமர் ரஜாய் அறிவிப்பு.
அக்., 28: கேடலோனியா பார்லிமென்ட்டில் தனிநாடு தீர்மானம், 70 சதவீத ஆதரவுடன் நிறைவேற்றம். இதனால் விடுதலை பெற்றதாக அறிவிப்பு. ஆனால் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்து, ஸ்பெயின் அரசே கேடலோனியா நிர்வாகத்தையும் ஏற்கும் எனவும், அங்கு நவ., 21ல் புதிய தேர்தல் நடத்தவும் ஸ்பெயின் பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேடலோனியாவின் பங்கு
16% ஸ்பெயின் மக்கள்தொகையில் 16 சதவீதம்.
25.6% நாட்டின் ஏற்றுமதியில் இதன் பங்கு 25.6 சதவீதம்.
19% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 19 சதவீதம்.
20.7% நாட்டின் வெளிநாட்டு முதலீட்டில் இதன் பங்கு 20.7%
Post a Comment