Ads (728x90)

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்கு, மக்கள் அளித்துள்ள வரவேற்பின் அடிப்படையில், 'பறக்கும் தாமரை' என்ற தனிப் பாடலை, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர், நரேந்திர மோடி, கடந்தாண்டு நவம்பரில் வெளியிட்டார். இது குறித்த தனிப் பாடலை, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:'பறக்கும் தாமரை' என்ற இந்த தனிப் பாடல் மூலம், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு, அது வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை இசை வடிவில் கொடுத்துள்ளேன்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget