யாழ்ப்பாண மாவட்ட காணிசம்பந்தமான சிறப்பு மத்தியஸ்த்தா்களை ஜரோப்பிய ஆணைக்குழு அதிகாரிகள் யாழ்ப்பாண செயலகத்தில் சந்தித்துள்ளனா்.ஜரோப்பிய ஆணைக்குழுவின் மூத்த ஆலோசகா் எஸ்.சீதபொன்கலன் தலைமையில் மூன்று பேர் கொண்ட வெளிநாட்டவர்களே நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது ஜரோப்பிய ஆணைக்குழு மூத்த ஆலோசகா் எஸ்.சீதபொன்கலன் தெரிவித்ததாவது; இலங்கைக்கு 40 மில்லியன் யூரோ நிதி நன்கொடையாக வழங்கவுள்ளோம். இதில் உள்ளுராட்சி சபைகளின் அபிவிருத்தி மத்தியஸ்த சபை (காணி) மற்றும் சனசமூக மத்தியஸ்த சபைகளின் அபிவிருத்திப் பயிற்சி மற்றும் விடயங்களுக்கும் ,பால் நிலைசமத்துவத்துக்கும் இந்த நிதி பகிரப்படும் என்றாா்.
இதில் கலந்து கொண்ட காணி சம்பந்தமான சிறப்பு மத்தியஸ்தா்கள் தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
”காணி சம்பந்தமான சிறப்பு மத்திய சபைக்குப் பொருத்தமான கட்டடம் ,தளபாடம் என்பவற்றுடன் பிணக்குக்கு வருபவர்களுக்கான வசதிகளை வழங்க வேண்டும். மத்தியஸ்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். என்பதுடன் வெளிநாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். சனசமூக மத்தியஸ்த சபைத் தவிசாளர்களுக்கு மின்னியல் சாதனங்கள் வழங்குவதுடன் மத்தியஸ்தர்களின் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று அந்தக் கருத்துக்கள் அமைந்திருந்தன.
யாழ்ப்பண மாவட்டக் காணிசம்பந்தமான சிறப்பு மத்தியஸ்தர்கள் சார்பில் மூத்த ஒருங்கிணைப்பாளர் சனாதன சர்மா மத்தியஸ்த்தர்களது நலச்சேவைகள் குறித்து விளக்கினார்.
Post a Comment