Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். கழன்று சென்­று­வி­டு­மென் பதை அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னின் செயற்­பா­டு­கள் எடுத்­துக் காட்­டு­கின்றன.
இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதை ஈ.பி.ஆர். எல்.எப். விரும்­ப­ வில்லை. எனவே இந்­தத் தேர்­த­லில் தனித்தோ அல்­லது ஒத்த தரப்­பி­ன­ரு­டன் இணைந்தோ பொதுச் சின்­ன­மொன்­றில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.
தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட வேண்­டிய அவ­சி­யம் தமது கட்­சிக்கு இல்­லை­யெ­ன­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.
தனித்­துச் செல்­வ­தன் பின்­னணி
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகி­யன இணைந்து அங்­கம் வகிக்­கின்­றன. தமிழ் அர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்­சி­க­ளும் முன்­னாள் போரா­ளிக் குழுக்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த நான்கு கட்­சி­க­ளும் ஒரே­ய­ணி­யில் இணைந்து தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டு­வ­தால் பெரு­வெற்­றியை ஈட்­டிக் கொள்ள முடி­கின்­றது. ஆனால் காலத்­துக்­குக் காலம் கூட்­ட­மைப்­பி­னுள் புகைச்­சல் ஏற்­ப­டவே செய்­கின்­றது.
கடந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லில் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தோல்­வி­யைத் தழு­விக் கொண்­டார். வெற்றி பெறு­வ­தற்­குத் தேவை­யான விருப்பு வாக்­கு­கள் கிடைக்­கா­மையே அவ­ரது தோல்­விக்­கான கார­ண­மா­கும்.
தேசி­யப் பட்­டி­யல் மூல­மா­க­வே­னும் தமக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதவி கிடைக்­கு­மென அவர் நம்­பி­யி­ருந்­தார். இது தொடர்­பாக கூட்­ட­மைப்­பின் தலை­வ­ருக்கு அழுத்­தங்­க­ளும் வழங்கப்பட்டன.
ஆனால் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதில் தமிழ் அர­சுக் கட்­சி­யும் தமக்­குத் துரோ­கம் இழைத்­து­விட்­ட­தாக அவர் கரு­தி­னார். அன்­றி­லி­ருந்து கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் மீதும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மீதும் தீராத பகை­யு­ணர்வு அவ­ரி­டம் தோன்­றி­விட்­டது.
காலத்­துக்­குக் காலம் சம்­பந்­த­னை­யும் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும் சாடி­வந்த அவர், தற்­போது உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­டும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.
கூட்­ட­மைப்­பில் விரி­சல்­கள்

கடந்­த­ கா­ல­த்திலும் இடம்­பெற்­றன
கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் பல தட­வை­கள் அங்கு விரி­சல்­கள் ஏற்­பட்­டுள்­ளன. வடக்கு மாகாண சபைத் தேர்­தல்­க­ளுக்­கான வேட்­பா­ளர் நிய­ம­னத்­தின்­போ­தும் மாகாண அமைச்­சர்­களை நிய­மிக்­கும் போ­தும் பெரும் களே­ப­ரம் இடம்­பெற்­றது.
மாகாண சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வு­செய்­யப்­பட்ட தமது சகோ­த­ர­ருக்கு அமைச்­சுப் பத­வியை வழங்­கு­மாறு சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் போர்க்­கொ­டி­யைத் தூக்­கி­னார். அப்­போதே கூட்­ட­மைப் பின் ஐக்­கி­யம் தொடர்­பாக மக்­க­ளி­டம் ஐயம் எழுந்­தது.
தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது தமிழ் அர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­கள் அதில் இணைந்து கொண்­டன. வடக்கு மாகாண முத­ல­மைச் சர் தாமும் அதில் இணைந்து கொண் ட­து­டன் இணைத் தலை­வர் பத­வி­யை­யும் ஏற்­றுக் கொண்­டார்.
அப்­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­தொரு அமைப்­பா­கவே தமிழ்­மக்­கள் பேரவை கரு­தப்­பட்­டது. பின்­னர் வடக்கு மாகாண சபை­யில் இடம்­பெற்ற வேண்­டத்­த­காத சம்­ப­வங்­கள் கூட்­ட­மைப்­பின் மதிப்­பைப் பெரி­தும் பாதித்­து­விட்­டது. மக்­கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யும் அடி­யோடு தகர்ந்­து­போ­னது.
கூட்­ட­மைப்பு நீட்சி பெ­று­வ­தையே

விரும்­பு­கி­றது தமிழ் அர­சுக்­கட்சி
தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் சக்­தி­யாக மதிக்­கப்­ப­டு­கின்ற கூட்­ட­மைப்­பி­னுள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குச் சிலர் முயற்­சிப்­ப­தைத் தமிழ் மக்­கள் எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள். புலி­கள் அமைப்­பி­னால் கட்டி வளர்க்­கப்­பட்ட ஐக்­கி­யம் சிதைந்­து­ போய்­வி­டு­வதை எந்த வகை­யி­லும் மக்­கள் சகித்­துக் கொள்­ள­வும் மாட்­டார்­கள்.
கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரா­கத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த சம்­பந்­தன் பதவி வகிக்­கின்­றார். அதே­கட்­சி­யின் தலை­வ­ரான மாவை சேனா­தி­ராசா பொதுச்­செ­ய­லா­ளர் பத­வியை வகிக்­கின்­றார். இதன் மூல­மாக கூட்­ட­மைப்­பி ­னுள் தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஆதிக்­கம் வலுப் பெற்­றி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.
நடந்து முடிந்த கசப்­பான சம்­ப­வங்­க­ளின் பின்­னர் தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஆத­ர­வா­ளர்­கள் தமது கட்சி தனித்­துச் செயற்­ப­டு­வதை விரும்­பி­னார்­கள். இத­னால் அந்­தக் கட்­சிக்கு எந்­த­வி­த­மான பாதிப்­பும் ஏற்­ப­டா­தென்­பது இவர்­க­ளின் நம்­பிக்­கை­யா­கும்.
ஆனால் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மேலி­டத் தலை­வர்­கள் கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக செயற்­ப­டு­வ­தையே விரும்­பு­ கின்­ற­னர். கூட்­ட­மைப்பு உடைந்­து­போ­னால் தமி­ழர்­க­ளின் ஐக்­கி­ய­மும் உடைந்து போய்­வி­டு­மென்­பது இவர்­க­ளின் கருத்து.
புரிந்­து­ கொள்ள வேண்­டும்

சுரேஷ்பிரே­மச்­சந்­தி­ரன்
கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்ற கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றாக அமர்ந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்­டிய தரு­ணம் இப்­போது வந்­து ­விட்­டது. அடுத்த ஆண்டு உள்­ளூ­ராட்­சிச் சபை­கள் மற்­றும் வடக்கு மாகாண சபைத் தேர்­தல்­கள் இடம்­பெ­ற­வி­ருப்­ப­தால் தேர்­தல் இடம்­பெ­றும் வேளை­ யில் பிரச்­சி­னை­கள் தொடர் பாக விவா­தித்­துக் கொண்­டி­ருக்க முடி­யாது.
இத­னால் பாத­க­மான விளை­வு­களே ஏற்­பட்­டு­வி­டும். சுரேஷ்­பி­ரே­மச் சந்­தி­ரன் தனி­வழி செல்ல விரும்­பி­னால் அதை தடுப்­ப­தால் பய­னொன்­று­மில்லை. ஏனென்­றால் ஏற்­க­னவே அவர் கூட்­ட­மைப்­பு­டன் முரண்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்.
கூட்­ட­மைப்பு நிலைத்­தி­ருக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை உண­ரா­மல் இருக்­கின்­றார். தனி­வழி சென்று இயங்­கும்­போ­து­தான் கூட்­ட­மைப்பின் அருமை அவ­ருக்­குத் தெரி­ய­வ­ரும். கூட்­ட­மைப்பு பிள­வு­ ப­டு­வ­தைக் காண்­ப­தற்­குப் பலர் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.
கூட்­ட­மைப்பு தமது நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக இருப்­ப­தாக இவர்­கள் எண்­ணிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் தமிழ் அர­சுக் கட்சி பலத்­து­டன் இருக்­கும்­வ­ரை­யில் இவர்­க­ளின் எண்­ணம் நிறை­வே­றப் போ­வ­தில்லை.
தந்தை செல்­வா­வின் தியா­கத்­தால் உரு­வாக அந்­தக் கட்சி எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் தலை­நி­மிர்ந்து நிற்­கவே செய்­யும். இதைச் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் போன்­ற­வர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget