
உடல் நலக்குறைவால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும்
நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் நேற்று வீடு திரும்பினார்.
Post a Comment