Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு பி.ப. 4 மணிக்கு முடி­வ­டைந்­த­து­டன், வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லேயே பி.ப. 5 மணிக்கு வாக்கு எண்­ணும் பணி­கள் உட­ன­டி­யாக ஆரம்­ப­மா­கும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் நடை­பெ­றும் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தும் பெரிய அள­வி­லான தேர்­த­லும் இது­வா­கும். முன்­னர் சகல சபை­க­ளுக்­கும் ஒரே தட­வை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வில்லை.

வேட்­பு­ம­னுத் தாக்­கல் இறுதி தினத்­திலோ அல்­லது குறித்த காலத்­திலோ வேட்­பா­ள­ருக்கு பாதிப்­பு­கள் ஏற்­ப­டும் வகை­யில் ஆர்ப்­பாட்­டங்­கள், பேர­ணி­கள், வாக­னப் பேர­ணி­கள் நடத்­து­வது தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு செயற்­ப­டும் நபர்­களை கைது செய்ய வேண்­டும் என்று பொலி­ஸா­ருக்கு நாம் அறி­வு­றுத்­தி­யுள்­ளோம்.

அதே­போல் பொலி­ஸார் இடம்­மாற்­றம் தொடர்­பில் எந்­தச் சிக்­க­லும் இல்லை. இலங்கை முழு­வ­தற்­கும் தேர்­தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. எங்கு மாற்­றி­னா­லும் சக­ல­ரும் கட­மை­யில்­தான் இருப்­பார்­கள். சில பொய்­யான கார­ணி­க­ளைக் கூறி விமர்­சிக்க முடி­யாது- என்றும் தேர்­தல் ஆணை­யா­ளர் குறிப்­பிட்­டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget