Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தில் இருந்த தடை­கள் தகர்ந்­துள்­ள­தால் தேர்­தற் களம் சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­யுள்­ளது. விரை­வில் ஏட்­டிக்­குப் போட்­டி­யாகக் கட்­சித் தாவல்­கள் இடம்­பெ­ற­வுள்­ள­தால் கொழும்பு அர­சி­யற் களத்­தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

மகிந்த அணி­யி­லுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உட்­பட மேலும் சிலர் மைத்­திரி அணி­யி­லும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­ட­னும் இணை­ய­வுள்­ள­னர்.

அதே­போல் கூட்­ட­ர­சி­லுள்ள உறுப்­பி­னர்­கள் சிலர் மகிந்த அணி­யின் பக்­கம் தாவ­வுள்­ள­னர். இது தொடர்­பான பேச்­சு­க்கள் ஒரு­பு­றத்­தில் மிக­வும் இர­க­ சி­ய­மான முறை­யில் நடை­பெற்­று­வ­ரும் நிலை­யில் மறு­பு­றத்­தில் தாவல்­களைத் தடுப்­ப­தற்­கு­ரிய சம­ரசப்­பேச்­சுக்­ க­ளும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

அர­சு­டன் கைகோர்க்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ருக்கு பிர­தி­ய­மைச் ­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. சட்­டம், ஒழுங்கு பிர­தி­ய­மைச்­சுப் பதவி மகிந்த அணி­யி­லுள்ள முக்­கிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு விரை­வில் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget