
விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதைத் தொடர்ந்து, மதுர வீரன் என்ற படத்தில், தற்போது நடித்து வருகிறார். இந்த படம் பற்றி, அதிகம் செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்தன.
இந்த நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, 'என்ன நடக்குது நாட்டிலே' என்ற பாடலை, ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில், முக்கிய அரசியல் கட்சிகள், தங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தின.
இதனால், 'இந்த பாடல், எந்த படத்தில் இடம் பெற்றுள்ளது' என, ரசிகர்களிடையே பேச்சு எழுந்ததால், மதுர வீரன் படம் பற்றிய தகவலும், தற்போது பரவலாக வெளியாகத் துவங்கியுள்ளது.
Post a Comment