உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையில் தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:தேர்தல் சட்டங்களின் படி பரப்புரைகளின் போது வேட்பாளர்கள் மானியங்களை வழங்குவது சட்டவிரோதமாகும். அது இலஞ்ச வழக்காக கருதப்படும். தேர்தல் திணைக்களத்தின் உத்தரவுகளை அரச அதிகாரியோ அல்லது அரச நிறுவனமோ மீறினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
மத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது, கல்விக்கான பொருள்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
அரச நிதியிலான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்க ளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment