Ads (728x90)

அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற செயற்திட்டங்களுக்கு மக்களின் நல்லபிப்பிராயம் இல்லையென்பதனைத் தான் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்து பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கமாக இருந்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனமையை தான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget