Ads (728x90)

இலங்கை அர­சி­யலில் ஏற்­பட்ட நெருக்­க­டி­யான நிலைக்கு இவ்­வா­ரத்தில் தீர்க்­க­மான முடிவு கிட்­டு­மென நம்­பப்­ப­டு­கி­றது. தேசிய அர­சாங்­கத்தின் 2வருட கால ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­னதைத் தொடர்ந்து அதன் பங்­காளிக் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தனித்­த­னி­யாக ஆட்சி அமைப்­ப­தற்­கான பனிப்­போரை ஆரம்­பித்­தன.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது தொடர்பில் பல்­வேறு சர்ச்­சை­யான சூழ்­நி­லைகள் காணப்­பட்­டன.  இதன் பின்­ன­ணியில் நாட்டின் அர­சியல் ஸ்திர­நிலை சீர்­கு­லைந்­த­துடன் இலங்­கையின் அர­சி­யலின் அடுத்­த­கட்டம் என்ன? என்­பது குறித்து

கேள்­விக்­கு­றி­யான நிலை­மையே உரு­வா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் தேசிய  அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கு­வது குறித்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் ஆலோ­சனை பெறு­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டது. மேலும் அர­சாங்­கத்தின் தற்­போது எழுந்­துள்ள சிக்­க­லான நிலைமை குறித்து பல்­வேறு கருத்­து­களை சட்ட வல்­லு­நர்கள் மற்றும் அர­சியல் ஆய்­வா­ளர்கள் முன்­வைத்­துள்­ளனர்.

மேலும்,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான பனிப்­போரில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­வ­தையே காண­மு­டி­கி­றது. எவ்­வா­றெ­னினும் அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள பர­ப­ரப்­பான நிலைக்கு இவ்­வா­ரத்தில் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, நாட்டில் காணப்­பட்ட அர­சியல் மோதல் நிறை­வுக்கு வந்­துள்­ள­தா­கவும் தானே தொடர்ந்து பிர­த­ம­ராக செயற்­படப் போவ­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இளம் உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்றுக் காலை இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே பிர­தமர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முகம்­கொ­டுத்­துள்ள நெருக்­க­டி­களை புரிந்­து­கொண்டு செயற்­ப­டு­மாறு பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

சுசில் பிரேம ஜயந்த உட்­பட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் எதிர்க்­கட்­சிக்கு செல்­வ­தா­கவும் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை பத­விப்­பி­ர­மாணம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருந்த இளம் உறுப்­பி­னர்­களை சமா­தா­னப்­ப­டுத்­திய பிர­தமர் அமைதி நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார்.

சம­கால நல்­லாட்சி அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்ல ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் ஒத்­து­ழைப்பை வழங்­கு­மாறு சில வெளி­நாட்டு தூத­ரங்கள் தொடர்ந்து ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget