Ads (728x90)

இந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும் அதன் தலை­மை­க­ளை­யும் தம்­மைத்­தாமே கேள்வி கேட்க வேண்­டிய ஒரு நிலைக்­குத் தள்­ளி­யுள்­ளது. அசைக்­க­ மு­டி­யாது என்­றி­ருந்­த­வர்­கள் நில­ந­டுக்­கத்தை அனு­ப­வித்­துள்­ளார்­கள் என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

எமது உரி­மை­களை, உரித்­துக்­களை தொடர்ச்­சி­யாக ஆணித்­த­ர­மாக எமது புலம்­பெ­யர் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளை­யும் முன்­வைத்து அர­சி­டம் நீதி­யா­ன­வற்றை, நியா­ய­மா­ன­வற்­றைப் பெற்­றுக் கொள்­வ­தில் எவ்­வித சம­ர­சத்­துக்­கும் இடம் கொடுக்­கா­மல் தீர்க்க தரி­ச­னத்­து­டன் செயற்­பட்­டி­ருந்­தால் தெற்­கில் யார் வந்­தா­லும் எம்­ம­வர் பயப்­ப­டத் தேவை­யி­ருந்­தி­ருக்­காது.

சுய­ந­லன் தரக்­கூ­டிய வெளி­நாட்டு உள்­ளீ­டல்­க­ளால் மக்­க­ளு­டன் கலந்­தா­லோ­சி­யாது பல­விட்­டுக் கொடுப்­புக்­களை இன்­றைய ஆட்­சிக்­காக எமது தலை­மை­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­த­மை­யால் தெற்­கில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் மாற்­றம் எம்மை மேலும் பல­வீ­னப்­ப­டுத்தி இருக்­கின்­றதோ என்று சிந்­திக்க வைக்­கின்­றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget