Ads (728x90)

இலங்கை – பாகிஸ்தான் இடையே இடம்பெற்று வரும் இரு தரப்புப் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக் கொள்ள தேவையான முன்னெடுப்புக்களை முன்னெடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத்கான் அப்பாஸி கேட்டுக் கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத்கான் அப்பாஸிக்கும் இடையில் வெள்ளியன்று இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் பாரிய முதலீடுகளைமேற்கொள்ள பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளதாகவும், எரிபொருள், எரிவாயு போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். இலங்கைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராகவுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget